நாட்டு மக்கள் பட்டினியில் தவிக்க வெள்ளி கலந்த கரண்டியில் உணவருந்தும் அதிகாரி!

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு உண்பதற்கு 42,000 ரூபா செலவில் வெள்ளி கலந்த 6 கரண்டிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக பணியகத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரி சாப்பிடும் போது பயன்படுத்தும் கரண்டிகள் பழையதாக இருப்பதால், புதிய கரண்டிகளை வாங்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பத்தரமுல்லையில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் இருந்து 5000 ரூபாவுக்கு ஆறு கரண்டிகள் கொள்வனவு செய்யப்பட்டு, அவற்றை பரிசோதித்த சம்பந்தப்பட்ட அதிகாரி, அவர்கள் எதிர்பார்த்த தரத்தில் இல்லாத காரணத்தினால் தரமான கரண்டிகளை கொண்டு வருமாறு பணித்துள்ளார்.

பின்னர், வெள்ளி கலந்ததாக கூறப்படும் ஆறு கரண்டிகளை 42,000 ரூபா செலுத்தி வாங்கியதாக கூறப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply