
சிங்கப்பூர் மக்கள் அண்மைக்காலமாக தங்கத்தை வாங்குவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உலக தங்க மன்றம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் இந்தாண்டின் இரண்டாவது காலாண்டில் 43 சதவீதம் உயர்ந்து சுமார் 3.8 தொன் தங்கம் விற்பனையாகியுள்ளது. கடந்த 2021-ன் இரண்டாவது காலாண்டில் 2.7 தொன் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
தங்க நகைக்கான தேவை அதிகரித்ததும் தங்கக் காசுகள்,தங்கக் கட்டிகள் போன்றவற்றின் மீது ஆர்வம் காட்டியதும் மக்களின் தேவை அதிகரித்ததற்கு காரணம் என்று உலகத் தங்க மன்றம் தெரிவித்தது.



