ஜெனிவா பறந்தது இலங்கை அரச குழு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் இன்று ஜெனிவாவுக்குப் பயணமாகியுள்ளனர்.

இந்தக் குழுவில் வெளிவிவகார அமைச்சருடன் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ச, சட்டமா அதிபர் திணைக்களத்தினர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 51 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply