நெல் மற்றும் மரக்கறி உள்ளிட்ட பெரும்போக பயிர்செய்கைக்காக இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
பெரும்போக பயிர்களுக்குத் தேவையான தாவர ஊட்டச் சத்துக்கள் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார்.
உரிய தரத்தில் தரமான தாவர சத்துகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




