போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு சர்வதேச பிடியாணை

சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய புள்ளியும் , பாதாள உலகக் கும்பலின் முன்னிலைத் தலைவருமான ‘ஹரக் கட்டா’ துபாய் விமான நிலையத்தில் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், ”ஹரக் கட்டா” என்றழைக்கப்படும் நதுன் சிந்தக உள்ளிட்ட 08 பேரை துபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஹரக் கட்டாவை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான சர்வதேச சிவப்பு பிடியாணைக்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply