அரசாங்கத்துக்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை இன்று

கொழும்பு,செப் 21

அரசாங்கத்திற்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான சில பிரேரணைகள் இன்று(21) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவில் தலைமையில் இன்று(21) காலை 9.30 மணிக்கு கூடவுள்ள சபை அமர்வின் போது, இந்த பிரேரணைகள் தொடர்பில் விவாதிக்கப்படுள்ளது.

இதனிடையே, தேசிய சபையை ஸ்தாபிப்பதற்கான பிரேரணை வாக்கெடுப்பின்றி நேற்று(20) மாலை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply