யாழில் பாடசாலை ஒன்றின் அருகில் போதைப்பாக்கு விற்பனை செய்த ஒருவர் கைது

யாழ்., செப்.21

யாழ்.மானிப்பாயில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அருகில் போதைப்பாக்கு வியாபாரம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாயலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் போதைப்பாக்கு விற்பனை இடம்பெற்று வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் கடையில் சோதனையிட்டபோது ஒரு தொகை சாதா என அழைக்கப்படும் பாக்கை கைப்பற்றினர்.

அதனை அடுத்து கடை உரிமையாளரை கைது செய்த பொலிஸார், மீட்கப்பட்ட போதைப்பொருளையும் கைது செய்யப்பட்ட நபரையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply