மாணவர்களுக்கு பட்டப் படிப்பினை மேற்கொள்ள அரசாங்கம் வழங்கும் புதிய சந்தர்ப்பம்!

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையில் குறைந்த பட்ச பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட தேசிய விளையாட்டு வீரர்களும் பட்டப்படிப்பினை நிறைவு செய்ய முடியும் என விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அமல் எதிரிசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையில் குறைந்த தேர்ச்சி பெறுபேற்றினை கொண்ட தேசிய விளையாட்டு வீரர்கள் தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply