முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சந்தேக நபராக தம்மை பெயரிட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட நோட்டீசை இடைநிறுத்துமாறு கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.