
மூத்த பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்டம் நேற்றுமுன்தினம் முதல் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
மூத்த பிரஜைகளுக்கான விசேட நிலுவை வைப்பு மற்றும் புதுப்பித்தல் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று இலங்கை மத்திய வங்கியால் வர்த்தக வங்கிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைய, உரிய பணிப்புரைகள் இலங்கை மத்திய வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த பிரஜைகளுக்கு நிலையான வைப்பாளர்களுக்கு 14.5 சதவீதமான வட்டி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது 15 சத வீத வட்டி வழங்கப்பட்டது.



