இனி பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சி!

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சி பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் இன்று முதல் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல்கட்டமாக ஆயிரம் பாடடசாலைகளில் இவ்வாறு கஞ்சி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் போஷாக்கு மட்டத்தினை அதிகரிப்பதற்காக கஞ்சி வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply