தீர்மானம் மிக்க பாராளுமன்ற அமர்வு சற்றுமுன் ஆரம்பம்!(படங்கள் இணைப்பு)

இன்றைய பாராளுமன்ற அமர்வானது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் சற்றுமுன் ஆரம்பமானது.

இந்நிலையில் இன்றையதினம் தற்போது முதல் 10.30 வரை வாய்வழி விடைகளுக்கான வினாக்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் காலை 10.30 முதல் மாலை 5.00 வரை அரசியலமைப்பு சட்ட மசோதாவின் இருபத்தி இரண்டாவது திருத்தம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெறும்.

இதன்பின்னர் எதிர்கட்சிகளின் ஒத்திவைப்பு நேர இயக்கம் மாலை 5.00 முதல் மாலை 5.30 வரை விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply