தொடரும் அதிரடிகள்:சுதந்திரக் கட்சியின் முக்கிய புள்ளிகளுக்கு ஆப்பு!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டத்துக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இன்றையதினம் மாலை சுதந்திரக்கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம் கட்சி தலைவர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்றது.

சுமார் 150 மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். சிலர் கூட்டத்தை புறக்கணித்திருந்தனர்.

அரசாங்கத்துடன் இணைவார் எனக் கருதப்படும் துமிந்த திஸாநாயக்கவுக்கு இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

Leave a Reply