புங்குடுதீவில் 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது!

யாழ்ப்பாணம், புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு 01ஆம் வட்டாரம், ஜே.28 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 25 வீட்டுத்திட்ட கிராமத்தில் வசிக்கும் 25 குடும்பங்கள் தொடரும் மழை காரணமாக பாதிப்படைந்துள்ளனர்.

அத்தோடு, வீடுகளுக்கு செல்லும் வீதியும் வெள்ளத்தில் மூழ்கியதால் மக்களுடைய போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply