
யாழ். திருநெல்வேலியில் வீடு ஒன்றில் நேற்றிரவு எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது.
இரவு உணவு தயாரித்துக்கொண்டிருந்தபோது அது வெடித்தது என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.



