புலிகள் கொலை கார்கள் – மாவீரர் நினைவேந்தல் செய்வது பாவம் – சிங்கள அமைச்சர் ஆவேசம்

இன்றைய நாடாளுமன்ற சபை அமர்வில் உரையாற்றிய முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும்,தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவிக்கையில்:

புலிப் பயங்கரவாதிகளை நினைவு கூருவது பாவம்.அவர்கள் கொலை காரர்கள்.உங்கள் பெற்றோர்களை கேளுங்கள் இராணுவமா,புலிகளாக மக்களை கொன்றது என்று.இவ்வாறு பயங்கரவாதிகளை நினைவேந்துவது தமிழ் மக்களுக்கு தமிழ் அரசியல் வாதிகள் செய்யும் பாவம்.

வெளியே சென்ற இளைஞர்களை முன்னர் காண முடியாது.புலி பயங்கரவாதிகள் அழைத்துச் சென்றுவிடுவார்கள்.இதனை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.அன்று நீங்கள் நிம்மதி அற்று இருந்தீர்கள்.இன்று தான் உங்களுக்கு விடுதலை என்றார்.

Leave a Reply