தேங்காய் எண்ணெய் மோசடியில் சிக்கிய தேரர் கைது

தேங்காய் எண்ணெயைப் பெற்றுக் கொண்டு கோடிக்கணக்கான பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் ஊவத்தனையைச் சேர்ந்த சுமன தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெமட்டகொட பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகத்தின் பேரில் தேரரை  கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply