காத்திருப்புப் பட்டியலில் நோயாளிகள் – மருத்துவர்கள் பற்றாக்குறையால் மோசமாகும் இலங்கையர்களின் நிலை

அரச ஊழியர்களுக்கு 60 வயதிலேயே ஓய்வு அளிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் காரணமாக, தற்போதுள்ள இருதய மற்றும் மார்பக அறுவை சிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நாட்டின் சுகாதார சேவையில் தற்போது 27 இருதய மற்றும் மார்பக சத்திரசிகிச்சை நிபுணர்கள் தேவைப்படுகின்ற போதிலும், 18 வைத்தியர்கள் மாத்திரமே அந்த சேவைகளை வழங்கவுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் தற்போது கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணம் மற்றும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடமையாற்றி வருகின்றனர். இதில் மூன்று வைத்தியர்கள் இந்த வருடம் ஓய்வுபெறவுள்ள நிலையில் மேலும் நால்வர் அடுத்த வருடம் ஓய்வுபெற உள்ளனர்.

மேலும் ஒரு வைத்தியர் வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும் இதனால் இந்நாட்டில் 10 விசேட வைத்தியர்களே எஞ்சியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் 60 வயது நிறைவடையவுள்ளதால் அவர்களும் ஓய்வு பெறப்போவதாகக் குறிப்பிடப்படுகிறது.

தற்போது இதய அறுவை சிகிச்சைக்காக நோயாளிகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்புப் பட்டியலில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது, மேலும் மருத்துவர்கள் பற்றாக்குறையால் எதிர்காலத்தில் நிலைமை மோசமாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *