இராகலை உயர் பாடசாலை பாரதி திருவுருவச்சிலை முன்றலில் அதிபரின் தலைமையில் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் பாரதி அஞ்சலி நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் என்பன வெகு விமரிசையாக (11/12/2022) நேற்றைய தினத்தன்று இடம்பெற்றன.
மேலும் இந்நன்னாளில் இராகலை மற்றும் அதனை சூழ வறுமையின் பிடியில் வாடும் மாணவர்களின் கல்விக்கு புத்தாண்டில் கை கொடுக்கும் முகமாக மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம், கற்றல் உபகரணங்கள் வழங்கும்,வேலைத்திட்டத்தினையும் ஆரம்பித்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.