போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி வரும் பெருந்தோட்ட மாணவர்கள்!

பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வருகைத் தரும் மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மாணவர்கள் அதிகமாக போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மக்கள் அதிகமாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலையில், அவர்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்த 1,000 ரூபாய் சம்பளமும் உரிய முறையில் கிடைப்பதில்லை.

இந்த நிலையில் பெருந்தோட்ட பாடசாலைகளில் 10 சதவீதமான மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிப்பதில்லை என்றும் எனவே கல்வி அதிகாரிகள் இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *