பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 04 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவர்கள் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய முன்னாள் துணைவேந்தர் தாக்கப்பட்ட வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.