களத்தில் இறங்கிய புத்தளம் நகரசபை

நாட்டில் டெங்கு நோய் அதிகரித்து வரும் நிலையில். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு புத்தளம் நகரசபையினால் டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் முன்னெக்கப்பட்டது.

சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதுடன் புத்தளம் நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளிலும்  டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து புத்தளம் நகரசபைத் தலைவர் எம்.எஸ்.எம் ரபீக் விஷேட பணிப்புரைக்கமைய புத்தளம் சுகாதார பணிமனை அதிகாரிகளுடன் இனைந்து இன்று டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெட்டது.

இதன்போது அதிகாரிகளால் இனங்காணப்பட்ட நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அழிக்கப்பட்டதுடன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.

ஏனைய பகுதிகளிலும் இச்செயற்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply