பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டம்!

பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி ஜோ பைடன் இந்த வாரம் இந்த நடவடிக்கையை அறிவிப்பார் என்று பெயரிடப்படாத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்ய தாக்குதல்கள் தொடர்ந்து பொதுமக்களைக் கொன்று பெரும் இருட்டடிப்புகளை ஏற்படுத்தியதால், உக்ரைன் சில காலமாக மேலும் வான் பாதுகாப்பு ஆதரவைக் கோரி வருகிறது.

பேட்ரியாட் மிகவும் மேம்பட்ட அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும், ஆனால் உக்ரைனுக்கான விநியோகம் குறைவாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது.

இதில் எத்தனை பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைகள், உக்ரைனுக்கு அனுப்பப்படும் என்பது தெரியவில்லை.

இந்த நடவடிக்கை அங்கீகரிக்கப்பட்டதும், எதிர்வரும் நாட்களில் அமைப்புகள் அனுப்பப்படும், உக்ரைனிய வீரர்கள் ஜேர்மனியின் கிராஃபென்வோஹரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் அவற்றைப் பயன்படுத்த பயிற்சி பெற்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply