உலக சாதனை படைத்த நிந்தவூர் சிறுவன்: குவியும் பாராட்டுக்கள்!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் நிந்தவூர் 8ம் பிரிவை சேர்ந்த அப்துல்லாஹ் பர்வின் , (தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவியாகவும், ) மற்றும் நப்றாஸ் முஹம்மட் ஆகியோரின் மகனுமாகிய நப்ராஷ் அனீக் அகமட் என்ற 4 வயதுடைய சிறுவன் இலங்கையில் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

100 உலக நாடுகளின் கொடிகளை அடையாளம் காண்பதில் வேகமானவர்” என்ற உலக சாதனையை அடைந்துள்ளார்.

100 உலக நாடுகளின் கொடிகளின் பெயர்களை 1 நிமிடம் 18 வினாடிகளில் கூறி, 1 நிமிடம் 50 வினாடிகளில் அடையாளம் கண்ட முந்தைய சாதனையை முறியடித்து, சர்வதேச சாதனை புத்தகத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

குறித்த சிறுவனுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply