யாழில் பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்ற இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!

நேற்று மாலை  வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை சந்திக்கு அருகே இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அராலி மத்தி கணவத்தை பகுதியைச் சேர்ந்த இளைஞனே விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த இளைஞன் பேருந்தினால் இறங்கி நடந்து வந்துகொண்டிருந்த வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்து இளைஞன் 1990 இலக்க அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply