இலங்கை கிரிக்கெட் தேர்தலை நடத்த குழு நியமனம்!

இலங்கை கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ தேர்தல் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அந்த உத்தியோகபூர்வ தேர்தல் பணிகளுக்காக விசேட குழுவொன்றை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த குழுவில் நீதியரசர் மாலானி குணரத்ன, நீதியரசர் ஷிரோமி பெரேரா மற்றும் இலங்கை நிர்வாக சேவையில் இருந்து ஓய்வு பெற்ற சுனில் சிறிசேன ஆகியோர் அடங்கியுள்ளனர்.

Leave a Reply