கொரோனா பயத்தில் தனது குடும்பத்தை 1 வருடம் பூட்டி வைத்த நபர்….!

கலேவெல – பாம்பரகஸ்வெவ பகுதியில் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டிலையே அடைத்து வைத்த நபர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு வீட்டில் அடைக்கப்பட்டுள்ளமையினால், தனக்கும் தனது குழந்தைகளுக்கும் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக மக்குளுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில், மனைவி முறைபாடு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மக்குளுகஸ்வெவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply