மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை உயிரிழப்பு!

<!–

மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை உயிரிழப்பு! – Athavan News

மூச்சுத் திணறல் காரணமாக மூன்றரை மாதக் குழந்தை பரிதமாக உயிரிழந்துள்ளது.

இணுவில் தெற்கைச் சேர்ந்த குணசீலன் யுகன் என்ற மூன்றரைமாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தாய்ப்பால் குடித்த குழந்தை திடீரென மூச்சடங்கி காணப்பட்டது.

உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.


Leave a Reply