வெடுக்குநாறி மலை ஆதிசிவன் கோவில் விவகாரம்; அகில இலங்கை சைவ மகா சபை கண்டனம் SamugamMedia

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டு சிவலிங்கம் காணாமல் செய்யப்பட்ட செயலை அகில இலங்கை சைவ மகா சபை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

உடனடியாக காரணமானவர்கள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஏற்கனவே கடந்த காலங்களில் சைவ சமயிகளின் வழிபாட்டிற்கு பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த பின்னணியில் மேற்படி சம்பவத்தை மத நல்லிணக்கத்திற்கு பாரிய இடையூறு விளைவிக்கும் இச்செயலை உரிய நோக்கில் அரசாங்கம் அணுகி தீர்வு காண வேண்டும்.

உடைக்கப்பட்ட சிலைகள் உடனடியாக மீண்டும் நிறுவப்பட வேண்டும். ஆதி சிவன் கோவில்கள் மீதான தொடர் விரும்பதகாத செயற்பாடுகள் தமிழ்ச் சைவர்களின் மனதை ஆழமாக பாதித்தது வருகின்றது.

இந்த விடயத்தில் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் செயலூக்கத்துடன் கூடிய எதிர்ப்பை வெளிகாட்ட வலியுறுத்துகின்றோம் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply