மக்களே அவதானம்…! வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம்…! விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை! samugammedia

தென் மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில்

மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழமுக்கம் அக்டோபர் 23ஆம் திகதியன்று வலுப்பெற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். காற்றானது தென்கிழக்கு  திசையிலிருந்து வீசக்கூடுவதுடன்  காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply