சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்…! பயணிகள் குதூகலம்…!samugammedia

உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இயேசு பாலகனின் பிறப்பை நேற்றையதினம் சிறப்பான முறையில் கொண்டாடியுள்ளனர்.

அதேவேளை, இலங்கையிலும் தேவாலயங்களில் இடம்பெற்ற நத்தார் விசேட ஆராதனைகளில் பல்லாயிரக்கணக்கான  பங்குபற்றியுள்ளனர்.

அத்துடன், கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இவ்வாறானதொரு நிலையில், நேற்றையதினம் சிறிலங்கன் எயார்லைன் விமானத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியுள்ளது.

இதன்போது சிறிலங்கன் எயார்லைன் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு இனிப்பு பண்டங்கள் வழங்கப்பட்டதுடன்  விமான பணியாளர்கள் நத்தார் உடையில் பயணிகளுக்கு வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply