நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு முக்கிய அறிவிப்பு..!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு  முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 

அந்தவகையில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், மனுக்கள் மற்றும் தீர்ப்புகளின் நகல்களை வழங்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் செயலாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் மனுக்கள் மற்றும் தீர்ப்புகளை சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

அதேவேளை மே 06 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்புமனுக்கள், பிறப்புச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களைச் சமர்ப்பிக்காதது, முறையாக உறுதிமொழியைச் சமர்ப்பிக்காதது மற்றும் பிறப்புச் சான்றிதழ்களின் நகல்களை மட்டுமே சமர்ப்பித்ததன் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டன.

இருப்பினும், ஏப்ரல் மாதத்தில், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான 70க்கும் மேற்பட்ட வேட்புமனுக்களை ஏற்க மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *