மோசடிக்கு எதிராக சமூகம் எழுந்திருக்க வேண்டும் – ஹரிணி அமரசூரிய கோரிக்கை

மே மாதம் 7 ஆம் திகதி வெற்றியை ஜனநாயக ரீதியாகவும் அமைதியாகவும் கொண்டாடுங்கள் என்றும் மோசடிக்கு எதிராக சமூகம் எழுந்திருக்க வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஹோமாகம, கிரிவந்த்துடுவ, தொம்பே, நாவலமுல்ல மற்றும் மாகம்மன ஆகிய இடங்களில்  நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்  

எமக்கு இன்னும் நிறைய வேலைகள் உள்ளன. மிக முக்கியமான விடயம் எமது கல்வி முறையை சீர்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு முறையாகப் பயிற்சி அளிக்க வேண்டும். ஆசிரியர் வெற்றிடங்களை முறையாக நிரப்ப வேண்டும். பல ஆண்டுகளாக ஆசிரியர் நியமனங்கள் முறையாக நடைபெறவில்லை. அதிபர் நியமனங்கள் முறையாக செய்யப்படவில்லை. கல்வி அமைச்சினால் செய்யப்பட்ட பல்வேறு முறைகேடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளன.

மோசடி, சமூகத்தால் நிராகரிக்கப்பட வேண்டும். பாடசாலைகள், வைத்திய சாலைகள், வேலைதளங்கள், அலுவலகங்கள், கடைகள் என எல்லா இடங்களிலும் மோசடியை மக்கள் எதிர்க்க வேண்டும். குறிப்பாக நமது இளைஞர் குழுக்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து, செய்ய வேண்டிய விடயங்கள் உள்ளன. கனவுகளைக் காண மட்டுமல்ல, அவற்றை நனவாக்கவும் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.

அண்மையில், ஒரு பல்கலைக்கழக மாணவரின் துயரச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டோம். பொலிஸார் இந்த விடயத்தை விசாரித்து வருகிறோம். இது போன்ற சம்பவங்கள் சமூகத்திற்கும் பல்கலைக்கழக முறைமைக்கும் இடையிலான பிணைப்புகளில் ஏற்பட்டுள்ள முறிவைக் காட்டுகின்றன, மேலும் அந்த நிலையை நாம் மாற்ற வேண்டும்.

நீண்ட காலமாக ஒரு திட்டம் இல்லாமல் இருக்கும் நிறுவனங்கள் உள்ளன, அவற்றை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இந்தப் பயணத்தை யாரும் எதிர்க்க முடியாது. பண்பாட்டை நேசிக்கும் யாரும் எங்கள் பயணத்தை எதிர்க்க முடியாது. 

முதல் முறையாக, எமது நாட்டின் ஆட்சியாளர்களும் மக்களும் இணைந்து செயற்படுகிறார்கள். மக்கள் தங்கள் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொண்டுள்ளனர். அந்த நம்பிக்கையை நிலைநிறுத்துவதன் மூலம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

உங்களிடமும் வரிகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பணம் இவ்வளவு காலமாக சிலரின் சட்டைப்பைகளுக்குள் சென்று கொண்டிருந்தது, உங்கள் பணம் மீண்டும் யாருடையவும் பைகளுக்கும் செல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நீங்கள் அந்தப் பணத்தை உங்களுக்கு ஒரு சேவையாகக் கிடைக்கச் செய்கிறீர்கள்.

இது ஒரு பண்பாடான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பயணம். இதை இருபத்திநான்கு மணி நேரத்தில் செய்துவிட முடியாது. இது துல்லியமாகவும் திட்டமிடலுடனும் செய்யப்பட வேண்டும், எனவே இதற்கு நேரம் எடுக்கும். அரசாங்கம் என்ன செய்தது என்று கேட்பவர்கள் மக்களை மனதில் கொண்டு கேட்பதில்லை.

இந்த முறை தேர்தலில் வெற்றி நிச்சயம். மே 7 ஆம் திகதி வெற்றியை அமைதியாகக் கொண்டாடுங்கள். உள்ளூராட்சி நிறுவனங்களில் பணியாற்ற எமது புதிய உறுப்பினர்கள் தயாராகுங்கள்.  

யார் கலவரமடைந்தாலும், கூச்சலிட்டாலும், அரசாங்கம் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை. அரசாங்கம் ஒரு திட்டத்தின் படி பயணம் மேற்கொண்டு வருவதாகவும், அரசாங்கம் மக்களுக்கு மட்டுமே பதிலளிக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசந்த தொடவத்த மற்றும் அருண பனாகொட உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களும், பிரதேசவாசிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *