அல்வாய் இளைஞன் கம்பர்மலையில் சடலமாக மீட்பு

 

யாழ்ப்பாணம் கம்பர்மலை பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அல்வாய் வடமத்தி பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே நேற்று மாலை 3:00 மணியளவில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நண்பர்களுடன் சென்ற நிலையில், குறித்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. 

இறப்புக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *