IPL 2025; சென்னையை 6 விக்கெட்டுகளால் வீழ்த்திய ராஜஸ்தான்!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று (20) நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியுடனான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியானது ஆறு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி RR அணியை கடைசி புள்ளிகள் தரவரிசையில் இறுதி இடத்துக்கு செல்வதை தடுத்தது.

ஏனெனில், அந்த இடத்தில் இருந்த மஞ்சள் படையால் நேற்றிரவு தங்கள் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முடியவில்லை.

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 62 ஆவது போட்டியானது டெல்லியில் அமைந்துள்ள அருன் ஜெட்லி மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரமபமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற RR அணியானது முதலில் களத்தடுப்பை மேற்கொள்ளத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த CSK அணியின் இன்னிங்ஸ் ஆரம்பத்தில் சற்று தடுமாறியது.

டெவன் கான்வே (10) மற்றும் உர்வில் படேல் (0) ஆகிய முன்னணி துடுப்பாட்ட வீரர்கள் சொப்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் அணி எட்டு ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

எனினும், ஆயுஷ் மத்ரேவின் சிறப்பான துடுப்பாட்டம் அணிக்கு தேவையான வேகத்தையும், நம்பிக்கையையும் அளித்தது.

குறிப்பாக யுத்வீர் சிங்கின் ஒரு ஓவரில் 24 ஓட்டங்களை அவர் எடுத்தார்.

எனினும், பின்னர் துஷார் தேஷ்பாண்டேவின் ஒரு ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து அனுபவம் வாய்ந்த வீரர்களான டெவால்ட் பிரெவிஸ் (25 பந்துகளில் 42) மற்றும் சிவம் டூபே (39) ஆகியோர் ஆறாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்து 59 ஓட்டங்களை எடுத்து CSK இன் இன்னிங்ஸை மீட்டனர்.

பிரெவிஸ் மூன்று அபார சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளையும் எடுத்து பின்னர் ஆகாஷ் மத்வாலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர், அணித் தலைவர் எம்.எஸ். தோனி, ஆடுகளம் நுழைந்ததும் பலத்த கைதட்டலைப் பெற்றார், ஆனால் அவர் 17 பந்துகளில் 16 ஓட்டங்களை எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

ரியான் பராக் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தாலும், இறுதி இன்னிங்ஸில் எதிர்பார்த்த வேகம் ஒருபோதும் நிறைவேறவில்லை.

தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால், இன்னிங்ஸ் முழுவதும் வலுவான ஓட்ட விகிதம் இருந்தபோதிலும் சிஎஸ்கே CSK ஓட்டங்களை எட்டத் தவறியது.

அதன்படி, அவர்கள் 20 ஓவர்கள் நிறைவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் RR அணி யுத்வீர் சிங் மற்றும் ஆகாஷ் மத்வால் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை அதிகபடியாக கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய RR அணி 17 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.

வைபவ் சூர்யவன்ஷி (33 பந்துகளில் 57 ஓட்டம்) சஞ்சு சாம்சன் (31 பந்துகளில் 41 ஓட்டம்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (19 பந்துகளில் 36 ஓட்டம்) மற்றும் துருவ் ஜூரெல் (12 பந்துகளில் 31 ஓட்டம் ) ஆகியோர் RR அணிக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஆகாஷ் மத்வால் தெரிவானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *