மட்டு.மரக்கறி வியாபாரி காயங்களுடன் சடலமாக மீட்பு..!

வீட்டில் தனிமையில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்டுள்ளார்.

இச் சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரதேசத்தில் இன்று(26) இடம்பெற்றுள்ளது.

ஜெயந்திபுரம் குமாரத்தன் கோவில் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருவதுடன்இ மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்ற இவர்இ சம்பவ தினமான இன்று காலை வீட்டின் முன்பகுதி வாசல் கதவில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் வீட்டின் வெளிக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதன்பின்னர், தடவியல் பிரிவு பொலிசாரை வரவழைத்ததுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்ற அனுமதியை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *