புங்குடுதீவு கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம மீன்பிடிப் படகு – குழப்பத்தில் பொலிஸார்!

புங்குடுதீவு கடற்கரை பகுதியில் ஆட்களற்ற நிலையில் மீன்பிடி படகொன்று இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 07 மணியளவில் கரையொதுங்கியுள்ளது. 

ஆட்களற்ற நிலையில் படகொன்று  மீன் பிடி வலைகளுடன் கரையொதுங்கியுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. 

தகவலையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த ஊர்காவற்றுறைப் பொலிஸார், குறித்த படகை மீட்டு.

படகு தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார்  முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *