நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் மண் திட்டு சரிவு; போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிப்பு

நோட்டன் பகுதியில் நேற்று மாலை பெய்த கன மழை காரணமாக நோட்டன் பொலிஸ் பிரிவில் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் பாரிய மண் திட்டு சரிந்ததால் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்க பட்டது என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

சுமார் மாலை 6 மணியளவில் பெய்த மழையால் நோட்டன மஸ்கெலியா வீதியில் நோட்டன் நகர் அருகே பாரிய அளவில் மண் திட்டு சரிந்து விழுந்தது.

அதன் காரணமாக நோட்டன் மஸ்கெலியா பகுதிக்கு செல்லும் வீதி சுமார் ஜந்து மணி நேரம் தடைபட்டது.

அப் பகுதிக்கு விரைந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நோட்டின் பொலிசார் லக்சபான பகுதியில் உள்ள இராணுவத்தினர் மண் திட்டுகளை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்து நடவடிக்கைகள் சீர் செய்தனர்.

Leave a Reply