சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்றில் விசேட நிகழ்ச்சி; ரவிகரன் எம்.பி பங்கேற்பு!

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட விசேட நிகழ்ச்சி பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (19.08.2025)  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.

அந்தவகையில் இந் நிகழ்வில் 2025ஆம் ஆண்டில் தேசிய இளைஞர் மாநாட்டின்போது நியமிக்கப்பட்ட தேசிய இளைஞர் மாநாட்டின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

அத்தோடு தேசியஇளைஞர் மாநாட்டின் உறுப்பினர்களுக்கு பாராட்டுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இளைஞர் விவகாரங்கள் பிரதியமைச்சர் எரங்க குணசேகர, வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *