மருத்துவத்துறை, காவல்துறை, சட்டத்தறைக்கும் கைரேகை விதியை அமுல்படுத்துங்கள்; அர்ச்சுனா எம்.பி கோரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தொடர் வருகை குறைவாக உள்ளதைக் காரணம் காட்டி, கைரேகை அடிப்படையிலான வருகைப் பதிவை அமல்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுண ராமநாதன் முன்மொழிந்துள்ளார்.

கைரேகை அவசியம், அதனை  நாடாளுமன்றத்தில் இருந்து தொடங்குவோம் என தெரிவித்துள்ளார்

இன்று இங்கு எத்தனை எம்பிக்கள் உள்ளனர் என்பதைப் பாருங்கள். நாங்கள் மொத்தம் 350,000 ரூபாய் சம்பளம் வாங்குகிறோம். 

சில எம்பிக்கள் 66 அமர்வுகளில் 25 அமர்வுகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் என்று கூறினார். 

நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த மில்லியன் கணக்கில் செலவிடப்படுகின்றன. ஆனால் சில எம்பிக்கள் கலந்து கொள்ளவில்லை 

சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என்றும், மருத்துவத் துறை, காவல்துறை மற்றும் சட்டத் துறை உள்ளிட்ட தொழில்களில் கட்டாய கைரேகை விதியை அமுல்படுத்த வேண்டும் என்றும். கூறினார்.

 சட்டங்கள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். நீதிபதிகளுக்குப் பொருந்தும் சட்டம் வழக்கறிஞர்களுக்கும் பொருந்தும், மருத்துவமனை இயக்குநருக்குப் பொருந்தும் சட்டம் சிறு ஊழியர்களுக்கும் பொருந்தும், என்று அவர் கூறினார்

அனைத்துத் தொழில்களிலும் கட்டாய கைரேகை விதியை அமல்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *