நாடளாவிய ரீதியில் சிறப்பு பொலிஸ் நடவடிக்கை; 619 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (25) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது  619 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 26,216 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 27 நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் நிலுவையில் உள்ள பிடியாணையுடன் 396 சந்தேக நபர்கள் மற்றும் 73 மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பல்வேறு போக்குவரத்து குற்றங்களை மீறிய 3,810 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *