மன்னாரில் நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறுதலாக விழுந்த பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார் – கற்கிடந்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த முருங்கன் மத்திய கல்லூரியில் உயர்தர பிரிவில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றத.
15 அடி நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறுதலாக விழுந்து குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவனின் சடலம் நேற்று மீட்கப்பட்ட நிலையில்,
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





