இரண்டு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா தெல்தோட்டை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
தெல்தோட்டை லீட்டில்வெளி பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் அதே வீதியில் எதிர்த்திசையில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதிர் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டிகளில் பயணித்த ஆறு பேர் காயமடைந்துள்ள நிலையில் தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டிகள் இரண்டும் நேருக்கு நேர் மோதியதில் முன்பக்கம் நொருங்கி பலத்த சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




