இலங்கையின் உணவு நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் நிதியுதவி

<!–

இலங்கையின் உணவு நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் நிதியுதவி – Athavan News

இலங்கையின் உணவு நெருக்கடியை சமாளிக்க ஜப்பான் அரசாங்கம் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.

இதற்காக ஜப்பான் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி அறிவித்துள்ளதாக ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு உதவிகளை வழங்குவதற்காக இலங்கைக்கு ஜப்பானின் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது, பலர் அன்றாட உணவுக்காகவும், எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்காகவும் போராடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply