பலப்பிட்டியில் பொலிஸார் வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம்

பலப்பிட்டிய,மே 30

பலப்பிட்டிய பிரதேசத்தில் போதையில் இருந்த குழுவினரால் தாக்கப்பட்டதில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.

அஹுங்கல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸாரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிறு இரவு பலபிட்டியவில் உள்ள வீதியொன்றில் இருந்து விலகிச் செல்லுமாறு பணிப்புரை விடுத்ததையடுத்து, இரண்டு பொலிஸாரும் குழுவினரால் தாக்கப்பட்டுள்ளனர்.
குழுவை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதை பொலிஸார் உறுதி செய்தனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

மதுபோதையில் காணப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் அதிகாரிகளையும் தாக்க முற்பட்டதாகவும் நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரி ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபர் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply