மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் விரைவில் : பிரகலாத் சிங் படேல்

இந்தியாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டம் அமுலுக்கு வரும் என மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்தார்.

சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவர இருப்பதாகவும் இதற்காக பெரியளவில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் பிரகலாத் பட்டேல் கூறினார்.

இந்த சட்டமே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் அடுத்த பெரிய திட்டம் என்றும் பிரகலாத் சிங் பட்டேல் குறிப்பிட்டார்.

Leave a Reply