ஜனாதிபதி பதவி விலகியதன் பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து பிரதமரிடம் சட்டமா அதிபர் விளக்கம்!

ஜனாதிபதி பதவி வெற்றிடமாக இருக்கும் பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபரின் கருத்து பிரதமரின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சட்டமா அதிபரிடம் மேற்கொண்ட விசாரணையின் பிரகாரமே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியதாகத் தெரிவித்த சபாநாயகர், பின்னர் தான் தவறுதலாக தெரிவித்ததாகவும் ஜனாதிபதி தற்போதும் நாட்டிலேயே தங்கியுள்ளார் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply