ராஜபக்ஷக்கள் விரட்டியடிப்பு: சிங்கள மக்கள் பாற்சோறு வழங்கி கொண்டாட்டம்!

நாட்டை அதல பாதாளத்திற்குள் வீழ்த்திய கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து தப்பியோடியதையடுத்து, ஹொரண பகுதியில் மக்கள் பாற்சோறு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஹொரண – யால பகுதியில் சாகர பேக்கரி உரிமையாளரால் பிரதேச மக்களிற்கு பாற் சோறு வழங்கப்பட்டது.

ராஜபக்ஷக்கள் விரட்டப்பட்டதன் மூலம் நாட்டை பீடித்திருந்த பெரும் களை நீக்கப்பட்டதாக பிரதேச மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply