இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வு 13 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ செங்கோலை சபைக்கு கொண்டு வந்ததையடுத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் கூடியுள்ளது.
இதன்போது, ஜனாதிபதியின் இராஜினாமா அறிவிப்பு மற்றும் இராஜினாமா கடிதத்தை சபையில் சமர்ப்பித்த பின்னர் பாராளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
பிறசெய்திகள்



