
அ.தி.மு.க.விலிருந்து எடப்பாடி பழனி சாமி உள்ளிட்ட 22 பேர் நீக்கப்படுகின்றனர் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அ.தி.மு.க. தற்போது ஓ.பி.எஸ். , இ.பி.எஸ். என இரு அணிகளாக செயற்பட்டு வருகின்றன.
சென்னை வானகரத்தில் கடந்த 11-ஆம் திகதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவுசெய்யப்பட்டார். அதனையடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது 18 ஆதரவாளர்களை கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார்.
அதற்கு, பதிலடியாக எம்மை கட்சியிலிருந்து நீக்கியமையானது செல்லுபடியற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 22 பேர் நீக்கப்படுகின்றனர் என ஓ.பி.எஸ். அறிவித்துள்ளார்.
கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயற்பட்டதால் அவர்கள் நீக்கப்படுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ச–இ)



